Thursday, November 15, 2012

THE KOLLYWOOD KING OF VIJAY

துப்பாக்கி வசூல் விவரம்

Thursday 15th of November 2012

ஏ ஆர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் வெளிவந்திருக்கும் துப்பாக்கி படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் வசூலிலும் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. அடுத்த கில்லி என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு துப்பாக்கி திரைக்கதையை செதுக்கி இருக்கிறார் முருகதாஸ். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், துப்பாக்கியின் வசூலும் பிரமிக்க வைக்கிறது.
திரையுலக ஜாம்பவான்கள் பலரும் துப்பாக்கி படத்தை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை இரண்டு தடவை பார்த்தேன். அந்த அளவுக்கு நன்றாக இருக்கிறது என்று முருகதாசுக்கு போன் போட்டு பாராட்டி இருக்கிறார் ரஜினி. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளாவிலும் கணிசமான ரசிகர்கள் விஜய்க்கு உண்டு. இதனால் மற்ற தமிழ் படங்களின் வசூல் சாதனையை கேரளாவிலும் முறியடித்திருக்கிறது துப்பாக்கி.
துப்பாக்கி வெளிவந்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றன. முதலிரண்டு நாட்களுக்கான வசூல் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் (13/11/2012)- 11.3 கோடி
இரண்டாம் நாள் (14/11/2012)-13.64 கோடி
ஆக மொத்தம் இரண்டு நாட்களில் 24.68 கோடியை வசூல் செய்துள்ளது.

super star vijay


துப்பாக்கியை இரண்டு முறை பார்த்து விட்டேன்: ரஜினிகாந்த்

Friday 16th of November 2012



விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்திருக்கும் துப்பாக்கி படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. முந்தைய படங்களின் சாதனையை துப்பாக்கி முறியடித்து விடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ஏழாம் அறிவு படத்தில் விமர்சனத்துக்கு உள்ளான ஏ ஆர் முருகதாசுக்கு துப்பாக்கி படம் பாராட்டைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
துப்பாக்கி படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பலரும் பாராட்டி இருந்தாலும், சூப்பர் ஸ்டார் பாராட்டியதை பெருமையாகக் குறிப்பிடுகிறார் ஏ ஆர் முருகதாஸ். துப்பாக்கி படத்தைப் பார்த்து விட்டு முருகதாசுக்கு போன் பண்ணிய ரஜினிகாந்த், படம் பிரமாதமாக இருக்கிறது. இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்து விட்டேன். அந்த அளவுக்கு நன்றாக இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்.
இது குறித்து ட்விட்டரில் தெரிவித்த முருகதாஸ்,"நம்ம தலைவர் ரஜினி சார் எனக்கு போன் செய்து பேசினார். துப்பாக்கி படத்தினை இதுவரை ரெண்டு தடவை பார்த்து விட்டேன். அற்புதமான வேலை. நல்ல படம் என்றார். சந்தோஷமாக இருக்கிறது" என்று ட்வீட் செய்திருக்கிறார்.



Wednesday, November 7, 2012

கமல் பிறந்தநாள் எனக்கு மினி தீபாவளி: விஜய்



digg
துப்பாக்கி படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், முதல் பட ரிலீசுக்கு காத்திருக்கும் ஹீரோ போன்று ஆர்வமும் பதற்றமுமாக இருக்கிறார் விஜய். இது குறித்து கூறிய விஜய்,"10 வருடங்களுக்கு முன்பு வரை ஹிட் கொடுப்பது பெரிய விஷயம் அல்ல. இன்றோ நிலைமை தலை கீழாகி விட்டது. ஒவ்வொரு படத்துக்கும் அதிக உழைப்பைக் கொட்டணும். கடைசி நிமிடம் வரை உயிரைக் கொடுக்கணும். அதனால தான் ரிசல்டை நினைக்கும் போது பயமாவும் இருக்கு, த்ரில்லிங்காவும் இருக்கு" என்றார்.
விஜய்க்கு சினிமாவில் நண்பர்கள் கிடையாது என்று பலரும் கூறுவார்கள். இது குறித்து கூறிய விஜய்,"இது அபாண்டமான வதந்தி. எல்லார் கூடயும் நல்ல உறவோடு தான் இருக்கேன். ஆனா வெளிய காட்டிக்கிறதில்ல. கடந்த 3 வருசமா கமல் சாரோட பிறந்தநாளுக்கு மறக்காம ஆஜர் ஆகிடுவேன். இந்த வருடமும் அவரோட பிறந்தநாள் எனக்கு மினி தீபாவளிதான்" என்றார்.முன்னணி ஹீரோக்கள் சிலரின் படங்கள் ப்ளாப் ஆகி விட புதுமுகங்களின் படங்கள் ஜெயித்து விட்டன. இது குறித்துக் கூறிய விஜய்,"தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ. அதை புரிஞ்சி நடந்தா எல்லா படமும் ஹிட் தான்" என்றார்.
விஜய் மட்டும் அல்லாமல் அவரது மகன் சஞ்சய் குறித்த செய்திகளையும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்கின்றனர். தனது வாரிசு குறித்துக் கூறிய விஜய்,"சஞ்சய் இப்போது ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கிரிக்கெட் மேல காதல்னு சொல்லலாம். அந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியமா இருக்கான். எந்த மேட்ச் நடந்தாலும் டிவி முன்னாடி உக்காந்துக்கிறான். கிரிக்கெட் பயிற்சியும் எடுத்துக்கிட்டு இருக்கான். சேப்பாக்கமா கோடம்பாக்கமான்னு தெரியவில்லை" என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

வில்லனைக் கவர்ந்த விஜய்

Monday 5th of November 2012

digg
பில்லா 2 வில்லன் வித்யுத் ஜம்வால் தற்போது கோலிவூட் ரசிகர்களுக்கும் தெரிந்த முகமாகி விட்டார். அஜித்துக்கு வில்லனாக நடித்த வித்யுத்துக்கு விஜய்க்கும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லன் இந்த வித்யுத் தான்.
விஜய்யுடன் நடித்ததை மறக்க முடியாத தருணம் எனக் கூறுகிறார் இந்த வில்லன். துப்பாக்கி படத்தில் நடித்தது குறித்து கூறிய வித்யுத்,"துப்பாக்கி படத்திற்காக சிறந்த ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்திருக்கிறார் முருகதாஸ். திரைக்கதையையும் நன்றாக வடிவமைத்துள்ளார். படம் குறித்து 5 நிமிடம் கூறியதுமே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஹீரோவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் வில்லன் கேரக்டருக்கும் இருக்கிறது" என்றார்.
விஜய்யுடன் வித்யுத் நடித்த காட்சிகளை கிட்டத்தட்ட 25 நாட்களில் படமாக்கி இருக்கிறார்கள். அப்போது விஜய்யுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததாக கூறுகிறார் வித்யுத். முதல் முறையாக விஜய்யை பார்த்த போது இவ்வளவு சீரியசாக இருக்கிறாரே என்று நினைத்தேன். பழகிய பின்னர் தான் அவரது குணம் எனக்கு தெரிந்தது. இதுவரை நான் நடித்த ஹீரோக்களிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் விஜய் தான் என்றார்.

கமல் ரஜினியை முந்திய விஜய்



digg
துப்பாக்கி படம் குறித்து தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான் இந்தப் படம் குறித்த சிறிய செய்தி கூட ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்படுகிறது.
தமிழ் திரைப்பட வரலாற்றில் இப்படி ஒரு எதிர்பார்ப்பு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை அடுத்து துப்பாக்கிக்கு தான் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பும் இதை உறுதி செய்தது. அந்தக் கருத்துக் கணிப்பில் கோச்சடையான், விஸ்வரூபம், விஷ்ணுவர்தன் – அஜீத் படம், போடா போடி, ஆதிபகவன் போன்றவைகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடம் பிடித்திருக்கிறது துப்பாக்கி. துப்பாக்கியுடன் தீபாவளிக்கு போட்டி போடும் என்று நினைத்திருந்த பெரிய படங்கள் அனைத்தும் பின் வாங்கி விட்டன. இதனால் சோலோ ரிலீசாக வந்து கலக்கப் போகிறது துப்பாக்கி.
துப்பாக்கி குறித்து விஜய் கூறிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
"கிளைமாக்ஸுக்கு முந்தைய பைட் என் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டா இருக்கும். ராணுவ வீரர்கள் வருஷத்துக்கு ஒருமுறை தான் லீவுல ஊருக்கு வருவாங்க. அப்போ நடக்கிற சம்பவஙகள் தான் துப்பாக்கி கதை. கிளைமாக்ஸில் அருமையான மெசேஜ் ஒண்ணு இருக்கு. அதை கவித்துவமா சொல்லியிருக்கார் முருகதாஸ். எல்லாரையும் ஒரே நேரத்தில அடிச்சு காலி பண்ணாம புரூஸ் லி, ஜாக்கி சான் ஸ்டைல்ல ஒவ்வொருத்தரையா பிரிச்சி பிளான் பண்ணி அடிக்கிற ஆக்சன் தான் படம் முழுக்க வருது"

வெளிநாடுகளில் கலக்கும் துப்பாக்கி

Saturday 27th of October 2012

digg
விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இணைந்துள்ளதால் துப்பாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
துப்பாக்கி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் கடந்த வாரங்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. பல வருட இடைவெளிக்குப் பின் கூகிள் கூகிள் என்ற பாடலை இந்தப் படத்திற்காக பாடியுள்ளார் விஜய். கூகிள் கூகிள் டீசர் சில நாட்களுக்கு முன்னர் ரிலீசானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. பல சிறப்பம்சங்களுடன் தயாராகி இருக்கும் துப்பாக்கி படம் தீபாவளிku ரிலீசாகிறது. ஆடியோவும், ட்ரைலரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், விற்பனையிலும் துப்பாக்கி படம் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்னர் ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம், துப்பாக்கி படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை பெரிய விலைக்கு வாங்கியது. பில்லா 2, மாற்றான் படங்களை யு எஸ்சில் ரிலீஸ் செய்த ATMUS நிறுவனம் துப்பாக்கி படத்தையும், அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறது. பி ஆர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பிரெஞ்சு நிறுவனம் துப்பாக்கி படத்தின் விநியோக உரிமையை பெரும் தொகைக்கு வாங்கி இருப்பதுடன், 10 க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளது

Wednesday, October 10, 2012

THUPPAKI TRAILER HD




THUPPAKI AUDIO LAUNCH


விஜய்- காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் ‘துப்பாக்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.

இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னை பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் பாடல் சி.டி.யை வெளியிட பிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்றுக் கொண்டார்.
நடிகர் விஜய், விழாவில் பங்கேற்று பேசும்போது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘குட்டி மணிரத்னம்’ என்று பாராட்டினார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் ராதாரவி, கலைப்புலி தாணு, இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக் குமார். பா.விஜய், மதன் கார்க்கி, விவேகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

THUPPAKKI NEW STILLS
















Sunday, May 13, 2012

THALAIVAN


தமிழ் சினிமாவில் இரண்டு விஜய்கள் இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நடிகர் விஜய். இன்னொருவர் இயக்குநர் ஏ எல் விஜய்.
இந்த இருவருமே இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து பணியாற்றியதில்லை.
அந்தக் குறையைப் போக்கும் வகையில் இப்போது ஒரு புதுப் படத்தில் இருவரும் இணைகிறார்கள்.
தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை பிரபல சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.
விஜய் தற்போது துப்பாக்கியில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கவுதம் மேனனுடன் யோஹன் படத்தில் பணியாற்றுகிறார்.
அடுத்தது விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு வருகிறார். இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். ’7ஆம் அறிவு’ படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படம் முடிந்ததும் கவுதம் மேனன் இயக்கும் ‘யோகன் அத்தியாயம் ஒன்று’ படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பிறகு ‘மதராசபட்டினம்’ விஜய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு ‘தலைவன்’ என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.
யோகன் அத்தியாயம் ஒன்று படம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது